Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காதல் தோல்வியினால் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை

அக்டோபர் 21, 2022 12:40

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் டி.காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோவில் பிச்சை (வயது 51). இவரது மகன் தேவகுமார் (24). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண ஏற்பாடுகள் குறித்து மகனிடம் கோவில் பிச்சை பேசியுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொண்டால் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக கூறியுள்ளார். 

இதற்கு கோவில்பிச்சையும் சம்மதித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தேவகுமாருடன் அந்த பெண் பேசவில்லை. இதுகுறித்து தனது கவலையை அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஊருக்கு வருவதாகவும் தேவகுமார் கூறியுள்ளார். அதன்படி சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த தேவகுமார் சம்பவத்தன்று காதலியை சந்தித்து பேசியதாக தெரிகிறது. 

அப்போது அவர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு இனிமேல் தன்னிடம் பேச வேண்டாம் என கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது. இதனால் மன வேதனையில் தவித்த உதயகுமார் இனிமேல் வாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் பெட்ரோல் கேனுடன் நேற்று காதலியின் வீட்டிற்கு சென்றார். மகன் தற்கொலை செய்து கொள்ள செல்வதை அறிந்த அவரது பெற்றோர் உடனே அவரை தடுக்க சென்றனர். 

ஆனால் அதற்குள் தேவகுமார் காதலி வீட்டின் முன்பு பெட்ரோல் உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேவகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியில் என்ஜினீயர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்